Wednesday, September 10, 2014

அன்புக்கு ஒரு அத்தை .

                                               
                                                      அன்புக்கு ஒரு அத்தை .

                                   அம்மா  பாசம்  அளவிடமுடியாது .......அப்பா பாசம் அண்டத்தை விட பெரிது.....தாய்மாமன் பாசம் தன்மானம் மிக்கது .......மனைவி , தங்கை ,தம்பி,அண்ணன் ,பாசம்  தன்னிகரில்லதது ............கதைகள் ......காவியங்கள் ...திரைப்படங்கள் ...என எல்லா விதத்திலும்  பார்த்த ....அனுபவித்த பாச உறவுகளில் .....உலகம் ஒன்றை மட்டும்  மூடி மறைத்து மங்கலாக்கி விட்டது .அது நமது  தந்தையின் அன்பு தங்கையான  "அத்தை " யின் பாசம் .
        
                                                       கண்களை ஒரு நிமிடம் மூடி உங்கள் அத்தையை மனதில் நிறுத்தி உங்களுக்குள் பகிரப்பட்ட அன்பை நினைவுகூருங்கள் ...........வெளிகொனராத  பல நல்ல தருணங்கள் அங்கே குடத்திற்குள் ஒளிரும் விளக்காய் தெரியவரும் .
                      சிறு வயதில் அத்தை வீட்டுக்கு சென்றபோது உற்றாரிடம் "என் அண்ணன் மகன் " என காட்டி  பெருமித முகத்துடன் அகம் மகிழ்வதாகட்டும் ,வெளி இடங்களுக்கு சந்தோசமாய் கை பிடித்து கூட்டிபோவதகட்டும் ,அப்பாவிடம் கிடைக்காத சலுகையை வீட்டுக்கு வந்த இடத்தில் நயமாய் எடுத்துகூறி நமக்கு பெற்று தருவதாய்  இருக்கட்டும் .......சிறு வயதில் விளையாட்டு களைப்பு தீர மடியில் தலை சாயும்போது  விரலால் கோதி
'அத்தை மடி மெத்தையடி " என பாடாமல்  பாடி தூங்க வைப்பதாகட்டும் ......தலையணை நல்லதாகவே இருந்தாலும் ...இந்த தலையனை மெது ..   இதை வைத்து ... படுடா ...என்ற கணிவாகட்டும் .......தன்  மகளுக்கான பாதுகாப்பை அவளின் தாய்மாமனுக்கு இணையான நம்பிக்கையை நம் மீதும் வைப்பதிலாகட்டும் .......தன்  மகன்கள் உடனான நமது நட்பு ,பாசம் ,அன்பை .....கண்ணால் கண்டு மகிழ்வதிலாகட்டும் ....குடும்பத்திற்கு வந்த கஷ்ட நேரங்களின் போது தேவதையாக வந்து தாங்கி நிற்பதிலாகட்டும் .........அத்தைக்கு  நிகர் அத்தை தான்...........(ஆனாலும் ......வரமுடியா  தூரம் சென்றபின்தான் ....நமக்கும் மறைக்கப்பட்ட அந்த பாசம் ........நெஞ்சகூடுக்குள் வலியாய் பயணப்படுகிறது)
அத்தை  பாசத்திலும் பண்பட்டு வளர்ந்த மருமகன்களுக்கு சமர்ப்பணம்.......!!!!!!           என் மேலும் அளவற்ற பாசம் கொண்ட என் அத்தையின் மலரும் நினைவுகளோடு .............. @கல்யாண் ராஜன் .